குட்டையில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

 

குட்டையில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

சென்னை

சென்னை ஆவடி அருகே குட்டையில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், பொத்தூர் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் தட்சிணாமூர்த்தி (45). இவரது மகள் ரதிமீனா (13, தட்சிணாமூர்த்தியின் தம்பி மகள் காயத்ரி (15).

குட்டையில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

சென்னையில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, இவரது வீட்டின் பின்புறமுள்ள காலி நிலத்தில் உள்ள குட்டைகளில், தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அங்கு விளையாட சென்ற சிறுமிகள் இருவரும் எதிர்பாராத விதமாக குட்டையில் வழுக்கி விழுந்தனர்.

குட்டையில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு


இதில், நீரில் மூழ்கி உயிருக்கு போராடிய இருவரையும் உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.