3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – இருவர் கைது

 

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – இருவர் கைது

சென்னை

சென்னை அம்பத்தூர் அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 2 இளைஞர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.
அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், பட்டரவக்கம் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தம்பதிகள் சாலையோரம் வசித்து வருகின்றனர்.

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – இருவர் கைது


இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராமநாதபுரத்தை சேர்ந்த வளன்(26) மற்றும் நாங்குநேரியை சேர்ந்த சுபாஷ் (22) ஆகியோர், தங்களது வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – இருவர் கைது


பின்னர், வீட்டிற்கு அழுதுகொண்டே வந்த அந்த குழந்தை, நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தது. இதனையடுத்து, குழந்தையின் பெற்றோர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த வழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த சுபாஷ் மற்றும் வளன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.