‘பெண்ணிடம் ஆபாச பேட்டி’ : வைரலான வீடியோவில் சிக்கிய பிரபல யூ டியூப் சேனல்!

 

‘பெண்ணிடம் ஆபாச பேட்டி’ : வைரலான வீடியோவில் சிக்கிய பிரபல யூ டியூப் சேனல்!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் பெண்ணிடம் ஆபாசமாக பேசி வீடியோ எடுத்த, பிரபல யூ டியூப் சேனலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘பெண்ணிடம் ஆபாச பேட்டி’ : வைரலான வீடியோவில் சிக்கிய பிரபல யூ டியூப் சேனல்!

சென்னை டாக்ஸ் என்ற யூ டியூப் சேனல், ஒரு குறிப்பிட்ட தலைப்புகளை பற்றி இளைஞர்களிடம் கேட்டு அதனை வீடியோவாக வெளியிட்டு வந்தது. அந்த வகையில் 2020 எப்படி சென்றது என்ற தலைப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இளம்பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளனர். அதில், ஒரு இளம்பெண் மிகவும் ஆபாசமாக பேசியிருந்தார். அந்த வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.

‘பெண்ணிடம் ஆபாச பேட்டி’ : வைரலான வீடியோவில் சிக்கிய பிரபல யூ டியூப் சேனல்!

இது குறித்து சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த ஒரு லட்சுமி என்ற பெண், சென்னை டாக்ஸ் யூ டியூப் சேனல் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், அந்த யூ டியூப் சேனலின் தொகுப்பாளர் அசென் பாட்ஷா(23), கேமராமேன் அஜய் பாபு (24) மற்றும் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.