ஆபாச பேட்டி எடுத்த யூடியூப் சேனல் முடக்கம்!

 

ஆபாச பேட்டி எடுத்த யூடியூப் சேனல் முடக்கம்!

சென்னையில் பெண்ணிடம் ஆபாச பேட்டி எடுத்த சென்னை டாக்ஸ் பக்கத்தை யூடியூப் நிறுவனம் முடக்கியது.

ஆபாச பேட்டி எடுத்த யூடியூப் சேனல் முடக்கம்!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேட்டி எடுத்தது. இது குறித்து பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை டாக்ஸ் சேனலின் தொகுப்பாளர், கேமராமேன் மற்றும் உரிமையாளர் ஆகிய 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அத்துடன் பணம் பெற்றுக்கொண்டு ஆபாசமாக பேட்டி கொடுத்த அந்த பெண்ணிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஆபாச பேட்டி எடுத்த யூடியூப் சேனல் முடக்கம்!

இந்நிலையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பெண்ணிடம் ஆபாச பேட்டி எடுத்த சென்னை டாக்ஸ் பக்கத்தை யூடியூப் நிறுவனம் முடக்கியுள்ளது. சென்னை டாக்ஸ் யூடியூப் பக்கத்தை முடக்கக் கோரி சென்னை அடையாறு காவல்துறை துணை ஆணையர் விக்ரமன் கோரியதால் யூடியூப் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆபாச பேட்டி எடுத்த யூடியூப் சேனல் முடக்கம்!

முன்னதாக இந்த விவகாரம் குறித்து பேசிய சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார், யூடியூபில் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் வீடியோ வெளியிட்டிருந்தால் அதை உடனடியாக நீங்குங்கள். ஆபாச பேட்டிகளை எடுத்து ஒளிபரப்பினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.