சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவை நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்- ரயில்வே

 

சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவை நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்- ரயில்வே

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்கனமழையால், அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. அதே போல், ரயில் சேவைகளும், பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நிவர் புயலால் சென்னை புறநகர் ரயில்களும் மறுஅறிவிப்பு வரும் வரை இயங்காது என அறிவிக்கப்பட்டது.

சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவை நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்- ரயில்வே

இந்நிலையில் நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவை நாளை முதல் வழக்கம்போல் இயங்கும். அத்தியாவசிய பணியாளர்களுக்கான புறநகர் சிறப்பு ரயில் சேவை கால அட்டவணைப்படியே இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.