சென்னை புறநகர் மின்சார ரயிலில் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்!

 

சென்னை புறநகர் மின்சார ரயிலில் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்!

சென்னை மின்சார ரயிலில் 40 வயதுக்குட்பட்ட பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த பரனுரை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் கடந்த 8ஆம் தேதி இரவு பல்லாவரத்தில் இருந்து பரனுர் செல்ல செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் ஏறினார். குடிபோதையில் இருந்ததால் அப்பெண் அசந்து தூங்கியதாக தெரிகிறது. இதனால் அந்த மின்சார ரயில் செங்கல்பட்டு சென்று அங்கிருந்து மீண்டும் கடற்கரை ரயில் நிலையத்திற்கு சென்று, மீண்டும் தாம்பரம் வந்துள்ளது. அதன்பின், தாம்பரம் ரயில்வே பணிமனைக்கு சென்றுள்ளது.

சென்னை புறநகர் மின்சார ரயிலில் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்!

நள்ளிரவு 1.00 மணியளவில் அப்பெண் கண் விழித்து பார்த்தபோது பணிமனையில் ரயில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இரவு நேரம் என்பதால் வெளியே செல்ல பயந்த அவர் ரயில் உள்ளேயே இருக்க முடிவு செய்தார். அப்போது அங்கு வந்த தற்காலிக ரயில்வே ஊழியர்கள் சுரேஷ் (30) மற்றும் அப்துல் அஜிஸ் (30) ஆகிய இருவரும் கட்டாயப்படுத்தி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையடுத்து அப்பெண் தாம்பரம் ரயில்வே போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுரேஷ் மற்றும் அப்துல் அஜிஸ் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.