ராயபுரத்தில் 5 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று..!

 

ராயபுரத்தில் 5 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று..!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,989 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,687 ஆக அதிகரித்துள்ளது.

ராயபுரத்தில் 5 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று..!

சென்னையில் 30,444 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும், கொரோனா பரவுவது குறைந்ததாக இல்லை. அதனால் நேற்று முதற்கட்டமாக 81 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.

ராயபுரத்தில் 5 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று..!

இந்நிலையில் சென்னை கொரோனா பாதிப்பின் மண்டலவாரி விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் கொரோனா தொற்று 5 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,056 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.