சென்னையில் எஸ்.ஐ. வீட்டில் 34 சவரன் நகைகள் மாயம்- போலீசார் விசாரணை

 

சென்னையில் எஸ்.ஐ. வீட்டில் 34 சவரன் நகைகள் மாயம்- போலீசார் விசாரணை

சென்னை

திருமுல்லைவாயல் அருகே உதவி ஆய்வாளர் வீட்டில் 34 சவரன் நகைகள் மாயமானதாக புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் செல்லத்துரை(36). இவர் புளியந்தோப்பு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், செல்லத்துரை நேற்று முன்தினம் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தனது வீட்டின் பீரோவில் 50 சவரன் நகைகள் வைத்து இருந்ததாகவும், சில நாட்களுக்கு முன்பு பார்த்தபோது அதில் 16 சவரன் நகைகள் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தார். எனவே மாயமான 34 சவரன் நகைகளை மீட்டுத் தர வேண்டும் என அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.

சென்னையில் எஸ்.ஐ. வீட்டில் 34 சவரன் நகைகள் மாயம்- போலீசார் விசாரணை

புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த திருமுல்லைவாயல் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகார் குறித்து பேசிய போலீசார், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் தெளிவு இல்லை என்றும், இதுதொடர்பாக செல்லத்துரையின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.