முழு ஊரடங்கை மீறி நாளை வெளியில் சுற்றினால்… இதுதான் தண்டனை!எச்சரிக்கும் காவல்துறை

 

முழு ஊரடங்கை மீறி நாளை வெளியில் சுற்றினால்… இதுதான் தண்டனை!எச்சரிக்கும் காவல்துறை

நாளை முழு ஊரடங்கை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 26 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை தமிழக அரசு எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. அதன்படி, நாளை பால் விநியோகம் , மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முழு ஊரடங்கை மீறி நாளை வெளியில் சுற்றினால்… இதுதான் தண்டனை!எச்சரிக்கும் காவல்துறை

அவசர மருத்துவ தேவைகளுக்கும் அச்சு மற்றும் மின்னணு ஊடங்கள் பணிகளுக்காக தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. காய்கறி கடைகள் 5 மணி முதல் நண்பகல் 1 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. உணவகங்களில் இருந்து வீடுகளுக்கு பார்சல் உணவு வழங்கும் நிறுவனங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை நண்பகல் 12 மணி முதல் 3மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

திருமணத்திற்கு 100 நபர்கள் மிகாமலும், இறுதிச்சடங்கிற்கு 50 நபர்கள் மிகாமலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதைத்தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதியில்லை. மீறிவரும் வாகங்கள் மீது குற்றவியல் நடைமுறை பிரிவு 144இன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இதற்காக நகரம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதுதொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330/ 044-23452362 எனும் எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.