சென்னைக்குள் வர இரவு 10 மணிக்குப் பிறகு தடை! -காவல்துறை அறிவிப்பு

 

சென்னைக்குள் வர இரவு 10 மணிக்குப் பிறகு தடை! -காவல்துறை அறிவிப்பு

சென்னை மாநகருக்குள் வரும் வழித்தடங்களை இரவு 10 மணி முதல் மூட உள்ளதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னைக்குள் வர இரவு 10 மணிக்குப் பிறகு தடை! -காவல்துறை அறிவிப்பு

சென்னைக்குள் வரும் முக்கிய வழிதடங்களான, தாம்பரம் ,கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர், போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் வழித்தடங்களில் இரவு 10 மணிக்குப் பிறகு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கிழக்கு கடற்கரை சாலை தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு வரும் வழித்தடங்களை காவல்துறை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

சென்னைக்குள் வர இரவு 10 மணிக்குப் பிறகு தடை! -காவல்துறை அறிவிப்பு

புயல் நள்ளிரவு முதல் அதிகாலை வரை சென்னையை தாக்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த நேரத்தில் சென்னைக்குள் வரும் வாகனங்கள் பாதுகாப்பின்றி புயலில் சிக்கித் தவிக்கும் என்கிற காரணத்தால் சென்னைக்கு வரும் வாகனங்களுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.