சென்னை வாக்கு எண்ணிக்கை மையத்தில், காவல் ஆணையர் ஆய்வு!

 

சென்னை வாக்கு எண்ணிக்கை மையத்தில், காவல் ஆணையர் ஆய்வு!

சென்னை

சென்னையில் சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையம் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை பெருநகர மாநகராட்சியில் அதிகளவிலான வாக்காளர்களை கொண்ட வாக்குச் சாவடிகளில் நேற்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

சென்னை வாக்கு எண்ணிக்கை மையத்தில், காவல் ஆணையர் ஆய்வு!

அதன்படி, ராயபேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி, உருது தொடக்கப்பள்ளி, அரங்கநாயுடு பள்ளி மற்றும் சூளைமேடு நமச்சிவாயபுரம் மாநகராட்சி பள்ளி வளாகங்களில் பார்வையிட்ட ஆணையர், அங்கு பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அயனாவரம் ஐ.சி.எப் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டார்.

சென்னை வாக்கு எண்ணிக்கை மையத்தில், காவல் ஆணையர் ஆய்வு!

பின்னர், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்திற்கு சென்ற ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், அங்கு செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.