சென்னை வாக்கு எண்ணிக்கை மையங்களில், காவல் ஆணையர் நேரில் ஆய்வு!

 

சென்னை வாக்கு எண்ணிக்கை மையங்களில், காவல் ஆணையர் நேரில் ஆய்வு!

சென்னை

சென்னையில் உள்ள வாக்கு 3 எண்ணிக்கை மையங்களிலும் மேற்கொள்ளப் பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் லாயோலா கல்லூரி, காமராஜர் சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரி மற்றும் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை பார்வையிட்ட காவல் ஆணையர், அங்கு மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்படுகளை ஆய்வு செய்தார்.

சென்னை வாக்கு எண்ணிக்கை மையங்களில், காவல் ஆணையர் நேரில் ஆய்வு!

அப்போது, வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு ஒரு மாத காலம் உள்ளதால் சுழற்சி முறையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும், 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். இந்த ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.