சென்னை- எம்.எல்.ஏ கு.க.செல்வத்தின் மருமகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

 

சென்னை- எம்.எல்.ஏ கு.க.செல்வத்தின் மருமகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

சென்னை

சென்னையில் நடந்த சாலை விபத்தில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வத்தின் மருமகன் உயிரிழந்தார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வத்தின் மருமகன் துளசிராமன்(50). கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு துளசிராமன் விடுதியில்

சென்னை- எம்.எல்.ஏ கு.க.செல்வத்தின் மருமகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

உள்ள தனது மகளை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளர். அப்போது சாலையோரம் நின்ற காரில் இருந்து திடீரென கதவு திறக்கப்பட்டதில், மோட்டார் சைக்கிள் அதிவேகமாக மோதியுள்ளது. இதில், சாலையில் தூக்கி வீசப்பட்ட துளசிராமன் படுகாயமடைந்தார். காரில் இருந்தவர்கள் அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சாலையில் அடிபட்டு கிடந்ததாக கூறி அனுமதித்து விட்டு, தப்பியோடினர். அங்கு துளசிராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர்

சென்னை- எம்.எல்.ஏ கு.க.செல்வத்தின் மருமகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், துளசிராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இறந்துபோனது எம்எல்ஏ கு.க.செல்வத்தின் மருமகன் என்பது தெரியவந்தது. மேலும், விபத்து நடந்த இடம் மற்றும் மருத்துவமனையில் சேர்த்து விட்டு தப்பிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.