சென்னை மெட்ரோ விரிவாக்கம் : ரூ.63 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு!

 

சென்னை மெட்ரோ விரிவாக்கம் : ரூ.63 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னையில் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் என பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது;

ரயில்வே மற்றும் விமான துறையை மேம்படுத்த புதிய கட்டமைப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும். உற்பத்தி துறைக்கு ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை மெட்ரோ விரிவாக்கம் : ரூ.63 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழகத்தில் ரூபாய் 1.03 லட்சம் கோடியில் புதிய தொழில் வழித்தடம் அமைக்கப்படும். பல விமான நிலையங்களின் பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்கப்படும். நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகம் மற்றும் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. நாடு முழுவதும் மேலும் 11, 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். மூலதன செலவினங்களுக்காக மாநில அரசுகள், அதிகார அமைப்புகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ விரிவாக்கம் : ரூ.63 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு!

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ரூ.2,217 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை திட்டங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்படும். கன்னியாகுமரி கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலை அமைக்கப்படும்.

பிரத்யேக சரக்கு ரயில் பாதை திட்டங்கள் அடுத்த ஆண்டு ஜூன் 22 நிறைய நிறைவடையும். நாட்டில் உள்ள 72 சதவீதம் ரயில் பாதைகள் மின்மயம் ஆக்கப்பட்டுள்ளன. கொச்சி மெட்ரோ ரயில் திட்ட மேம்பாட்டு பணிக்கு மத்திய பட்ஜெட்டில் 1900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா 2.0 திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.