மதுவாரயல் மேம்பாலத்தில் ஜெனரேட்டர் ஏற்றி வந்த வாகனம் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

 

மதுவாரயல் மேம்பாலத்தில்  ஜெனரேட்டர் ஏற்றி வந்த வாகனம் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை

சென்னை மதுரவாயல் மேம்பாலத்தின் கீழே, ஜெனரேட்டர் ஏற்றிச்சென்ற வாகனம் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மதுவாரயல் மேம்பாலத்தில்  ஜெனரேட்டர் ஏற்றி வந்த வாகனம் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை துறைமுகத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி அதகத்திறன் கொண்ட ஜெனரேட்டரை ஏற்றிக்கொண்டு, கண்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் மேம்பாலத்தின் கீழே சென்றபோது, திடீரென பாலத்தில் ஜெனரேட்டர் உரசி, சிக்கிகொண்டது. ஓட்டுநர் கடுமையாக முயற்சிசெய்தும் கண்டெய்னரை நகர்த்த முடியவில்லை. சாலையின் நடுவே வாகனம் நின்று விட்டதால், கோயம்பேட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி செல்லும் வாகனங்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

மதுவாரயல் மேம்பாலத்தில்  ஜெனரேட்டர் ஏற்றி வந்த வாகனம் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்து வாகனங்களை செல்ல அனுமதித்தனர். தொடர்ந்து, ஜெனரேட்டரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காலை நேரத்தில் பாலத்தின் கீழ் வாகனம் சிக்கிக்கொண்டதால் பணிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரம்த்திற்கு உள்ளாகினர்.