சென்னை புறநகர் ரயில் சேவையும் ரத்து!

 

சென்னை புறநகர் ரயில் சேவையும் ரத்து!

நிவர் புயலால் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு தயார் நிலையில் வைத்திருக்கிறது. பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்கனமழையால், அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, சென்னையில் 5 மீட்புப்படையினர் தயார் நிலையில் இருக்கின்றனர்.

சென்னை புறநகர் ரயில் சேவையும் ரத்து!

நாளை மாலை அதிதீவிர புயலாக மாறி நிவர் புயல் கரையை கடக்கவிருக்கும் நிலையில், புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரயில் சேவைகளும், பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நிவர் புயலால் நாளை காலை 10 மணி முதல் சென்னை புறநகர் ரயில்களும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை ரயில்கள் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.