ஜெ. நினைவு இல்லத்தை நாளை திறக்க தடையில்லை; மக்கள் பார்வையிட அனுமதியில்லை- உயர்நீதிமன்றம்

 

ஜெ. நினைவு இல்லத்தை நாளை திறக்க தடையில்லை; மக்கள் பார்வையிட அனுமதியில்லை- உயர்நீதிமன்றம்

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசு நாளை திறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ஜெ. நினைவு இல்லத்தை நாளை திறக்க தடையில்லை; மக்கள் பார்வையிட அனுமதியில்லை- உயர்நீதிமன்றம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களின் மனுவில், ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை நீதிமன்றம் அறிவித்த பிறகும் அவரது சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டதாகவும், அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் இல்லத்திற்கான டெபாசிட் தொகையை செலுத்தியதால் அவரது இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது, மேலும் மக்கள் பார்வைக்காக ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நாளை திறக்கவிருப்பதாக அறிவித்தது.

ஜெ. நினைவு இல்லத்தை நாளை திறக்க தடையில்லை; மக்கள் பார்வையிட அனுமதியில்லை- உயர்நீதிமன்றம்

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்த தீபா, தீபக் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசு திறக்கலாம் என்றும், ஜெயலலிதாவின் வாரிசுகளான் தீபா, தீபக் முன்னிலையில் வீட்டில் உள்ள பொருட்களை கணக்கெடுக்க வேண்டியுள்ளதால், நினைவு இல்லத்துக்குள் பொதுமக்களை அனுமதிக்க கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் அப்பகுதியில் மக்களுக்கு இடையுறு ஏற்படுத்தும் வகையில் எந்த பேனர்களும் வைக்க கூடாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.