மின்சார வாரியத்தின் ஊரடங்கு கட்டணத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

 

மின்சார வாரியத்தின் ஊரடங்கு கட்டணத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும் போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையை கழித்து விட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்தது. ஆனால் இந்த உத்தரவால் மின்கட்டணம் அதிகமாக வருவதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் வீட்டு உபயோகத்திற்கான இணைப்புக்கான மின்சார அளவு கணக்கீடு செய்வது குறித்து மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்த்ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மின்சார வாரியத்தின் ஊரடங்கு கட்டணத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

முன்பு பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் யூனிட் அளவில் கணக்கிடாமல், முந்தைய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிப்பதன் மூலம், 12 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் ரவி குறிப்பிட்டுள்ளார். முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி ‘பில்’லாகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான ‘பில்’லாகவும் நிர்ணயித்து தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.