கட்டுமான நிறைவுச் சான்றின்றி மின் இணைப்பு தர சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

 

கட்டுமான நிறைவுச் சான்றின்றி மின் இணைப்பு தர சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

கட்டுமான நிறைவுச் சான்று இல்லாமலேயே மின் இணைப்பு அனுமதி பெறலாம் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

கோவையை சேர்ந்த நுகர்வோர் அமைப்பு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் இது குறித்து தமிழக அரசும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகமும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டுமான நிறைவுச் சான்றின்றி மின் இணைப்பு தர சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

அனைத்து இடங்களிலும் புதிய கட்டடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டட கட்டுமான நிறைவு சான்று கட்டாயம் என மின்வாரியம் அறிவித்தது. ஆனால் இந்த ஆணையானது திடீரென ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் அனைத்து வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டடங்களுக்கு மின்சாரம், குடிநீர் குழாய், பாதாள சாக்கடை உள்ளிட்ட இணைப்புகள் பெற கட்டுமான நிறைவுச் சான்றிதழ் பெற அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த அறிவிப்புக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

கட்டுமான நிறைவுச் சான்றின்றி மின் இணைப்பு தர சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

முன்னதாக இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி, “‘கட்டுமான பணி நிறைவு சான்று’ இல்லாமல் மின் இணைப்பு அளிக்கப்பட மாட்டாது என்ற ஆணையை தமிழக அரசு அவசரமாக நீக்க வேண்டி அவசியம் என்ன ? இந்த விதியையும் நீக்கினால் அனுமதியை மீறி கட்டிடம் கட்டுவோருக்கு என்ன தண்டனை ? ஆட்சி முடிய இன்னும் ஆறே மாதங்கள் இருப்பதால் அதற்குள் வசூலை அதிகரிக்கும் பொருட்டா ? நகர்ப்புறங்களில் விதிகளை மீறி கட்டிடம் கட்டுவோருக்கு வசதி செய்து கொடுக்கும் மின்வாரியம், கிராமப்புறங்களில் சிறிய வீடுகளை கட்டுவோரை அலைக்கழிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது’ என்று விமர்சித்திருந்தது கவனிக்கத்தக்கது.