திடீர் கோரிக்கை வைத்த ஓபிஎஸ், இபிஎஸ் – ஏற்க மறுத்த ஹைகோர்ட்!

 

திடீர் கோரிக்கை வைத்த ஓபிஎஸ், இபிஎஸ் – ஏற்க மறுத்த ஹைகோர்ட்!

அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். இது சம்பந்தமான அறிக்கை தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

திடீர் கோரிக்கை வைத்த ஓபிஎஸ், இபிஎஸ் – ஏற்க மறுத்த ஹைகோர்ட்!

இந்த வழக்கு விசாரணைக்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி நேரில் ஆஜராக ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், “அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

Madras High Court - Wikipedia

கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளது. உறுப்பினர் ஒருவரை கட்சியிலிருந்து நீக்கிய விவரத்தை கட்சியினருக்கும் மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவது அவதூறு குற்றமாகாது. ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தங்களுக்கு சம்மன் அனுப்பியது தவறு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் முறையிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் வழக்குகள் வெள்ளிக்கிழமை தான் பட்டியலிடப்படும் என்றது.