தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் பெரும் இக்கட்டான சூழலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. முகவர்கள், வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை, மையங்கள் வெளியே பொதுமக்கள் கூட தடை, வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்கு எண்ணிக்கையின் போது தொண்டர்களை தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சிறந்த நடவடிக்கைகள் எடுத்து தலைவர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். மே 2ம் தேதி பட்டாசுகள் வெடிக்க கூடாது, வெற்றி கொண்டாட்டங்கள் ஊர்வலம் கூடாது என்றும் அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.