நடிகர் விஜய் மீதான அபராதத்துக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

 

நடிகர் விஜய் மீதான அபராதத்துக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

நடிகர் விஜய்யை விமர்சித்த தனி நீதிபதியின் ஒட்டுமொத்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கினார். இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த காருக்கு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரியல் ஹீரோவாக இருங்கள், ரீல் ஹீரோவாக இருக்க வேண்டாம் என விமர்சித்தார். அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்ததோடு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

நடிகர் விஜய் மீதான அபராதத்துக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தை நீக்கக்கோரி விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி கட்ட தயார். வணிக வரித்துறையினர் சொல்லும் வரியை 7 அல்லது 10 நாட்களுக்குள் செலுத்தத் தயாராக இருக்கிறேன். இதற்காக தேச துரோகியாக முத்திரை குத்துவதா? என் மீது முன்வைக்கப்பட்ட தேவையில்லாத கருத்துக்களை நீக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், கார் வழக்கில் விஜய்யை விமர்சித்த நீதிபதி சுப்பிரமணியத்தின் ஒட்டுமொத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். விஜய்யை விமர்சித்த தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்குவது பற்றி 4 வாரங்களுக்குப் பின்னர் விசாரணை நடத்தப்படும். வணிகவரித்துறை ஒரு வாரத்தில் கணக்கிட்டு வரித் தொகை எவ்வளவு என்பதை சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் மீதம் உள்ள 80% வரித் தொகையை அடுத்த ஒரு வாரத்தில் விஜய் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.