‘பெண்களுக்கு சேஃப்டியான இடம் நம்ம சென்னை தானாம்பா’.. ஆய்வில் வெளியான தகவல்!

 

‘பெண்களுக்கு சேஃப்டியான இடம் நம்ம சென்னை தானாம்பா’.. ஆய்வில் வெளியான தகவல்!

பெண்களுக்கான சிறந்த இடம் சென்னை என ஐஐடி மும்பை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

‘பெண்களுக்கு சேஃப்டியான இடம் நம்ம சென்னை தானாம்பா’.. ஆய்வில் வெளியான தகவல்!

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வெளியூர்களில் இருந்து வருவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை மட்டும் அல்லது பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும் வேலைவாய்ப்புகளை தேடி மக்கள் அதிகமாக வர ஆரம்பித்து விட்டனர். இவ்வாறு நகரங்களை நோக்கிச் செல்லும் மக்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு இருக்கிறது? என சிறந்து நகரங்களின் பட்டியலை ஐஐடி மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர்.

‘பெண்களுக்கு சேஃப்டியான இடம் நம்ம சென்னை தானாம்பா’.. ஆய்வில் வெளியான தகவல்!

பாலின சமத்துவத்தையும் அடிப்படையாக வைத்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், அந்த ஆராய்ச்சியின் முடிவில் பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக சென்னை முதலிடத்தை பிடித்து அசதியுள்ளது. பெண்களின் பாதுகாப்பில் பாட்னா கடைசி இடத்திலும் இருக்கிறது. மொத்தமாக 14 பிரிவுகளில் மும்பை முதல் இடத்திலும் டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளதாம்.

பொருளாதார வளர்ச்சியில் மும்பையும், போக்குவரத்து வசதியில் டெல்லியும், கல்வி வளர்ச்சியில் பாட்னாவும் முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.