சென்னை எழும்பூர் – செங்கோட்டை வரையிலான சிலம்பு விரைவு ரயில் வாரம் 3 நாட்கள் இயக்கப்படும்!

 

சென்னை எழும்பூர் – செங்கோட்டை வரையிலான சிலம்பு விரைவு ரயில் வாரம் 3 நாட்கள் இயக்கப்படும்!

சென்னை எழும்பூர் – செங்கோட்டை வரையிலான சிலம்பு விரைவு ரயில் வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்துகள் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொது போக்குவரத்து துவங்கியுள்ளது. இதையடுத்து இன்று, சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி, செங்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகள் ரயில் நிலையங்களில் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு ரயில் சேவை தொடங்கப்படுவதால், ரயில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

சென்னை எழும்பூர் – செங்கோட்டை வரையிலான சிலம்பு விரைவு ரயில் வாரம் 3 நாட்கள் இயக்கப்படும்!

இந்நிலையில் சென்னை எழும்பூர்- செங்கோட்டை வரையிலான சிலம்பு விரைவு ரயில் வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் என்றும் சிலம்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.