சென்னை திநகர் நகைக்கடையில் கொள்ளை : திருவள்ளூர் கொள்ளையனின் காதலியிடம் விசாரணை!

 

சென்னை திநகர் நகைக்கடையில் கொள்ளை : திருவள்ளூர் கொள்ளையனின் காதலியிடம் விசாரணை!

சென்னை தி.நகர் நகைக்கடையில் கொள்ளையடித்தது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை தி.நகரில் உள்ள மூசா தெருவில் இயங்கி வந்த உத்தம் நகைக் கடையில் கடந்த 21ஆம் தேதி கொள்ளை போனது. இரண்டு மாடி கொண்ட இந்த கடையில் பூட்டை உடைத்து 4,125 கிலோ தங்க நகைகள், தங்க கட்டிகள், வைர நகைகள் ,15 வெள்ளி கட்டிகள் உட்பட 2 கோடி ரூபாய்க்கும் மேல் நகைகளை மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார்.

சென்னை திநகர் நகைக்கடையில் கொள்ளை : திருவள்ளூர் கொள்ளையனின் காதலியிடம் விசாரணை!

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல் நிலைய போலீசார் 5 தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி முகத்தை மூடியும், கையுறை அணிந்தும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை திநகர் நகைக்கடையில் கொள்ளை : திருவள்ளூர் கொள்ளையனின் காதலியிடம் விசாரணை!

இந்நிலையில் சென்னை தி.நகர் உத்தம் நகைக் கடையில் கொள்ளைடித்தது திருவள்ளூரை சேர்ந்த கொள்ளையனா? என விசாரணை நடந்து வருகிறது. திருவள்ளூரை சேர்ந்த கார்த்தியின் காதலியை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதன் மூலம் உத்தம் நகைக்கடை கொள்ளை குறித்து ஏதேனும் துப்பு கிடைக்கும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.