ஸ்டாலினுக்கு எதிராக கு.க.செல்வம் வழக்கு… நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட சென்னை நீதிமன்றம்!

 

ஸ்டாலினுக்கு எதிராக கு.க.செல்வம் வழக்கு… நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட சென்னை நீதிமன்றம்!

தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்கும்படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னுடைய ஆயிரம்விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் லிஃப்ட் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்ததாக தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த

கு.க.செல்வம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டு தமிழக பா.ஜ.க துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட வி.பி.துரைசாமியுடன் சென்று நட்டாவை சந்தித்த கு.க.செல்வம், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திப்பது தவறா என்று கேள்வியும் எழுப்பினார். தைரியம் இருந்தால் தன் மீது தி.மு.க தலைமை நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் பேட்டி அளித்திருந்தார்.

ஸ்டாலினுக்கு எதிராக கு.க.செல்வம் வழக்கு… நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட சென்னை நீதிமன்றம்!


இதைத் தொடர்ந்து கு.க.செல்வத்துக்கு விளக்கம் கேட்டு தி.மு.க தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவரை கட்சியில் இருந்து நீக்கி ஸ்டாலின் உத்தரவிட்டார். இதை எதிர்த்து கு.க.செல்வம் சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஸ்டாலினுக்கு எதிராக கு.க.செல்வம் வழக்கு… நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட சென்னை நீதிமன்றம்!


அந்த மனுவில், “நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு லிஃப்ட் வசதி செய்து தரக்கோரி மத்திய ரயில்வே அமைச்சரை சந்திக்க டெல்லி சென்றேன். அவரை சந்திக்க முடியவில்லை. ராமர் கோவில் கட்டுவதற்காக ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். நான் பா.ஜ.க-வில் இணையவில்லை என்று பத்திரிகைகளில் தெளிவாக கூறினேன். எனவே, என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை நகர சிவில் நீதிமன்ற நீதிபதி ஜெ.பாரதி, கு.க.செல்வத்தை தி.மு.க-வில் இருந்து நீக்கியதற்கு விளக்கம் அளிக்கும்படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.