தீபாவளிக்கு மறுநாள் அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவு

 

தீபாவளிக்கு மறுநாள் அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவு

நவம்பர் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மகாவீரர் நினைவு நாளை முன்னிட்டு அனைத்து இறைச்சி கூடங்கள் மற்றும் சிறு இறைச்சி கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் வருகின்ற நவ.15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதேபோல், ஆடு, மாடு, இதர இறைச்சிக் கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு மறுநாள் அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவு

எனவே, அரசு உத்தரவின்படி கண்டிப்பாக நவ.15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழுவதும் அனைத்து இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அரசு உத்தரவினைச் செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.