சென்னை மாநகராட்சி அறிவிப்பால் கொரோனா பரிசோதனைக்கு வரத் தயங்குவார்கள்!- டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை

 

சென்னை மாநகராட்சி அறிவிப்பால் கொரோனா பரிசோதனைக்கு வரத் தயங்குவார்கள்!- டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை

சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பால் கொரோனா பரிசோதனைக்கு வருபவர்கள் கூட இனி தயங்கும் அபாயம் உள்ளது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சென்னையில் கொரோனா பரிசோதனைக்கு சென்றாலே, சோதனை செய்துகொள்கிறவரும் அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற மாநகராட்சி ஆணையரின் திடீர் அறிவிப்பு மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஆளுக்கொன்றாக சொல்லி அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதை ஆட்சியாளர்கள் நிறுத்திவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

சென்னை மாநகராட்சி அறிவிப்பால் கொரோனா பரிசோதனைக்கு வரத் தயங்குவார்கள்!- டி.டி.வி.தினகரன் எச்சரிக்கைகொரோனாவின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டே போகும் நேரத்தில் சென்னையில் வீடு தோறும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்று திடீரென ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பரிசோதனைக்கு சென்று சோதனை செய்து கொள்பவரும் அவரது குடும்பத்தினரும் உடனடியாக தனிமைப்படுத்தப் படுவார்கள் என்று அதில் கூறி இருக்கிறார். இதுவரை பரிசோதனைகளில் கொரோனா இருப்பதாக உறுதி செய்யப் பட்டவர்களை மட்டுமே இத்தகைய முறையில் தனிமைப் படுத்தி வந்தனர். தற்போதைய அறிவிப்பின்படி சோதனையில் நோய் இல்லை என்று வந்தாலும் குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் சொல்கிறாரா? இதை கேட்ட பிறகு நோய் இருக்குமோ என சந்தேகப்படுவார்கள் கூட தாங்களாகச் சென்று எப்படி சோதனை செய்து கொள்வார்கள்? அரசு வசம் பரிசோதனைக் கருவிகள் குறைவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வரும் நிலையில் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கும் முயற்சியா இது? என்று மக்களிடம் சந்தேகம் எழுகிறது.

சென்னை மாநகராட்சி அறிவிப்பால் கொரோனா பரிசோதனைக்கு வரத் தயங்குவார்கள்!- டி.டி.வி.தினகரன் எச்சரிக்கைமுதல் அமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், முதலமைச்சரின் சிறப்பு அங்கிகாரம் பெற்ற தினசரி பேட்டி அமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், கொரோனா சிறப்பு அதிகாரி, கொரோனா சிறப்பு ஒருங்கிணைப்பாளர், சிறப்பு கண்காணிப்பு செய்ய தனித்தனியாக அமைச்சர்கள், மண்டல வாரியாக அதிகாரிகள், இவர்களோடு சேர்ந்து மாநகராட்சி ஆணையர் – என இத்தனை பேரும் கொரோனா தடுப்புப் பணி பற்றி ஆளுக்கொன்றாக பேசியும் செயல்பட்டும் அவரவர் இஷ்டப்படி அறிவிப்புகளை வெளியிட்டும் கொரோனாவை விட மோசமாக மக்களை இம்சித்து வருகிறார்கள். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல மக்களின் உயிரை வைத்து நாள்தோறும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
திறமையும் அனுபவமும் வாய்ந்த அமைச்சர் அல்லது அதிகாரி தலைமையில், துடிப்பான அதிகாரிகள் குழுவினர் ஒற்றை உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஒருங்கிணைந்து செயல்பட்டால் தானே மிக மோசமான பேரிடரை எதிர்கொள்ள முடியும்?! இந்த அடிப்படை கூட புரியாமல் அவருக்கு நெருக்கமானவர், இவருக்கு வேண்டப்பட்டவர் என மக்களைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் அமைச்சர்களும் அதிகாரிகளும் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இதை விட முக்கியமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு சார்பில் ஒரே இடத்தில் இருந்து மட்டுமே மக்களுக்கு அறிவிப்புகள் வெளியாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.