சென்னையின் 6 மண்டலங்களில் 6 ஆயிரத்தை எட்டியது கொரோனா பாதிப்பு!
தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் இந்த மாத தொடக்கத்திலிருந்து பாதிப்பு பன்மடங்கு உயர்ந்ததோடு உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் இன்றைய மண்டலவாரி கொரோனா விவரத்தைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக தண்டையார்பேட்டையில் 6,539 பேரும் அண்ணா நகரில் 6,033 பேரும் தேனாம்பேட்டையில் 6,095 பேரும் கோடம்பாக்கத்தில் 5,827 பேரும், திரு.வி.க நகரில் 4,666 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 55,969 பேருக்கு தொற்று பரவி இருப்பதாகவும் 21,681 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் 33,441 பேர் குணமடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வெளியிடப்பட்டு வந்த வரைபடத்தில் சென்னை மாநகராட்சி நேற்று மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.#Covid19Chennai #GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/E29yM6xN45
— Greater Chennai Corporation (@chennaicorp) June 30, 2020