சென்னையில் 29 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. மண்டலவாரி பட்டியல் உள்ளே!

 

சென்னையில் 29 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. மண்டலவாரி பட்டியல் உள்ளே!

சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே கிட்டத்தட்ட 29 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும், கொரோனா பரவுவது குறைந்ததாக இல்லை. அதனால் இன்று முதற்கட்டமாக 81 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் 29 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. மண்டலவாரி பட்டியல் உள்ளே!

இந்த நிலையில் சென்னை கொரோனா பாதிப்பின் மண்டலவாரி விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 4821 பேரும் , தண்டையார்பேட்டையில் 3781 பேரும் , திரு.வி.க நகரில் 2660 பேரும் , அண்ணா நகரில் 2781 பேரும் தேனாம்பேட்டையில் 3464 பேரும் , கோடம்பாக்கத்தில் 3108 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.