சென்னையில் 52 ஆயிரம் பேர் குணமடைந்துவிட்டனர்; மாநகராட்சியின் பாதிப்பு விவரம் வெளியீடு!

 

சென்னையில் 52 ஆயிரம் பேர் குணமடைந்துவிட்டனர்; மாநகராட்சியின் பாதிப்பு விவரம் வெளியீடு!

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் இந்த மாத தொடக்கத்திலிருந்து பாதிப்பு பன்மடங்கு உயர்ந்ததோடு உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

சென்னையில் 52 ஆயிரம் பேர் குணமடைந்துவிட்டனர்; மாநகராட்சியின் பாதிப்பு விவரம் வெளியீடு!

இந்த நிலையில் இன்றைய மண்டலவாரி கொரோனா விவரத்தைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,553 பேரும் அண்ணா நகரில் 2,236 பேரும் ராயபுரம் மண்டலத்தில் 1,582 பேரும் தேனாம்பேட்டையில் 2,036 பேரும் தண்டையார்பேட்டையில் 1,522 பேரும் அடையாறு மண்டலத்தில் 1,263 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், சென்னையில் கொரோனாவால்பாதிக்கப்பட்ட 73,726 பேரில் 52,287 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 52,000 குணமடைந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.