சென்னையில் கொரோனாவில் இருந்து 64,036 பேர் குணமடைந்து விட்டனர்!

 

சென்னையில் கொரோனாவில் இருந்து 64,036 பேர் குணமடைந்து விட்டனர்!

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் இந்த மாத தொடக்கத்திலிருந்து பாதிப்பு பன்மடங்கு உயர்ந்ததோடு உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

சென்னையில் கொரோனாவில் இருந்து 64,036 பேர் குணமடைந்து விட்டனர்!

இந்த நிலையில் இன்றைய மண்டலவாரி கொரோனா விவரத்தைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,219 பேரும் அண்ணா நகரில் 1,574 பேரும் ராயபுரம் மண்டலத்தில் 1,101 பேரும் தேனாம்பேட்டையில் 1,477 பேரும் தண்டையார்பேட்டையில் 957 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா உறுதியான 80,961 பேரில் 15,606 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 1,318 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் ஆண்கள் 57.89 சதவீதம் மற்றும் 42.11 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 64,036 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளது.