இந்த நிலையில் இன்றைய மண்டலவாரி கொரோனா விவரத்தைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 1511 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 59.52% ஆண்கள், 40.48% பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 1,511 பேருக்கு கொரோனா சிகிச்சை!
Aug 2, 2020, 11:38 IST1596348487000
தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது.
இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. அதனால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.