சென்னையை விட்டு ஓடிய கொரோனா!

 

சென்னையை விட்டு ஓடிய கொரோனா!

சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 2,262ஆக குறைந்துள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.28 லட்சமாக உள்ள நிலையில், இவர்களில் 5.18லட்சம் பேர் குணமடைந்து விட்டதாகவும், 8,032 பேர் பலியாகி உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை விட்டு ஓடிய கொரோனா!

சென்னையில் கடந்த 4 வாரங்களுக்கு முன்பு நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மே மாதம் முதல் சென்னை மாநகராட்சியின்தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. அதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 500க்கு கீழ் குறைந்துள்ளது. அதன் படி நேற்று சென்னையில் ஒரு நாளில் 468 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக 13 வது மண்டலமான அடையாறு மண்டலத்தில் 224பேர் தற்போது வரை சிகிச்சையில் உள்ளனர்.