சென்னையில் ஒரே நாளில் கொரோனாவால் 15 பேர் பலி.. குறைகிறதா பாதிப்பு?!

 

சென்னையில் ஒரே நாளில் கொரோனாவால் 15 பேர் பலி.. குறைகிறதா பாதிப்பு?!

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இன்று புதிதாக 4,328பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாகச் சென்னையில் கொரோனா பரவல் பன்மடங்காக அதிகரித்து வரும் நிலையிலும், குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதே போலச் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போதைய நிலவரத்தின் படி 78,573 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரே நாளில் கொரோனாவால் 15 பேர் பலி.. குறைகிறதா பாதிப்பு?!

இந்த நிலையில் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 பேரும் ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் 2 பேரும் கே.எம்.சி மருத்துவமனையில் 4 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.