சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 11 பேர் மரணம்!

 

சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 11 பேர் மரணம்!

சென்னையில் கொரோனா பாதிப்பு ஆரம்பக்கட்டத்தில் பன்மடங்கு அதிகரித்திருந்தது. இதனால் சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு சென்னை மக்கள் எங்கும் செல்லாத வண்ணம் தடுக்கப்பட்டது. அதே போல சென்னை முழுவதும் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, 300 மக்களை கண்காணிக்க 1 அதிகாரி என நியமிக்கப்பட்டதோடு, நடமாடும் பரிசோதனை முகாம், வீடு வாரியாக பரிசோதனை என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. சென்னையில் செயல்படுத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக தற்போது சென்னையில் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்து வருகின்றன.

சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 11 பேர் மரணம்!

இந்த நிலையில் சென்னையில் ஒரே நாளில் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 6 பேரும், கேஎம்சி மருத்துவமனையில் 2 பேரும் ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒருவரும் தனியார் மருத்துவமனைகளில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.