சென்னையில் இருவேறு இடங்களில் போலீசார் கொடி அணிவகுப்பு!

 

சென்னையில் இருவேறு இடங்களில் போலீசார் கொடி அணிவகுப்பு!

சென்னை

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் விதமாக இன்று சிந்தாதிரிப்பேட்டை மற்றும் செங்குன்றம் பகுதிகளில் காவல் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை புதுப்பேட்டை புறக்காவல் நிலையம் பகுதியில் இருந்து திருவல்லிகேணி துணை ஆணையர் பகலவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட ராஜஸ்தான் மாநில போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு காவலர்கள் அணிவகுத்து சென்றனர்.

சென்னையில் இருவேறு இடங்களில் போலீசார் கொடி அணிவகுப்பு!

புதுப்பேட்டையில் தொடங்கி, ஆதித்தனார் சிலை, டாம்ஸ் ரோடு, கிழக்கு கூவம் சாலை வழியாக சென்று சிந்தாதிரிப்பேட்டை பறக்கும் ரயில் நிலையம் அருகில் கொடி அணிவகுப்பு முடிவுற்றது.

இதேபோல், சென்னை செங்குன்றம் பகுதியில், புழல் சரக உதவி ஆணையர் ஶ்ரீகாந்த் தலைமையில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ராஸ்தான் மாநில போலீசார் மற்றும் சென்னை சட்டம், ஒழுங்கு காவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சென்னையில் இருவேறு இடங்களில் போலீசார் கொடி அணிவகுப்பு!

செங்குன்றம் திருவள்ளுவர் கூட்டு ரோடு அருகே தொடங்கிய கொடி அணிவகுப்பு, மொண்டியம்மன் நகர், பி.டி.மூர்த்தி நகர் மக்கள் கூடும் இடங்கள் முக்கிய சந்திப்புகள் வழியாக சென்று பாடியநல்லூர் அருகே முடிவுற்றது.