சென்னை, செங்கல்பட்டில் மழை!

 

சென்னை, செங்கல்பட்டில் மழை!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னை, செங்கல்பட்டில் மழை!

சென்னையில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கிண்டி, வடபழனி, தி.நகர், மாம்பலம், விமான நிலையம், பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

சென்னை, செங்கல்பட்டில் மழை!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி,பூந்தமல்லி, செங்குன்றம் ,மணலி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.வரும் 19 ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.