சென்னை தொழிலதிபரை கடத்தி ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்- இந்து மகாசபா நிர்வாகி உள்ளிட்ட 9 பேர் கைது

 

சென்னை தொழிலதிபரை கடத்தி ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்- இந்து மகாசபா நிர்வாகி உள்ளிட்ட 9 பேர் கைது

சத்தியமங்கலத்தில் 5 கோடி ரூபாய் பணம் கேட்டு கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த தொழிலதிபர் உள்ளிட்ட 3 பேரை மீட்ட போலீசார், இதுதொடர்பாக இந்து மகாசபா நிர்வாகி உள்ளிட்ட 9 பேரை கைதுசெய்தனர்.

சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் மோகன். இவர் பழமை வாய்ந்த பொருட்களை வாங்கி வருகிறார். இந்த நிலையில், சத்தியமங்கலத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் மற்றும் கோவையை சேர்ந்த இந்து மகாசபை நிர்வாகி பிரேம் ஆகியோர் தங்களிடம் பழமைவாய்ந்த பொருட்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். பொருட்களை வாங்க தொழிலதிபர் மோகன், தனது நண்பர் ரகுமான் மற்றும் ஓட்டுநர் ஆகியோருடன் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்துள்ளனர்.

சென்னை தொழிலதிபரை கடத்தி ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்- இந்து மகாசபா நிர்வாகி உள்ளிட்ட 9 பேர் கைது

அப்போது அங்கு 3 கார்களில் வந்த மர்மநபர்கள் தங்களை போலீசார் என கூறி, சட்டவிரோத செயலில் ஈடுபட வந்த உங்களை கைதுசெய்து செய்துவிடுவோம் என மிரட்டி சத்தியமங்கலம் அடுத்த ராஜன்நகரில் தோட்டத்தில் அடைத்துவைத்துள்ளனர். பின்னர், தொலைபேசி மூலம் அவரது மனைவி வித்யாவிடம் 5 கோடி ரூபாய் பணம் வழங்க வேண்டுமெனவும், இல்லாவிட்டால் மூவரையும் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து வித்யா, கடத்தல் கும்பலை சேர்ந்த ரமேஷ் என்பவரது வங்கி கணக்கிற்கு 3 தவணைகளாக 21 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார்.

இதனிடையே வித்யா, கடத்தல் சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் மோகனை அடைத்து வைத்துள்ள இடத்தை கண்டறிந்து, சுற்றி வளைத்தனர். தொடர்ந்து, மோகன் உள்ளிட்ட 3 பேரையும் மீட்ட போலீசார் கடத்தலில் ஈடுபட்ட போலீஸ் ரஞ்சித் (எ) ரஞ்சித்குமார், பிரேம், ரமேஷ், ஜீவானந்தம், சபாபதி உள்ளிட்ட 9 நபர்களை கைதுசெய்தனர்.

சென்னை தொழிலதிபரை கடத்தி ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்- இந்து மகாசபா நிர்வாகி உள்ளிட்ட 9 பேர் கைது

அவர்களிடமிருந்து 3 சொகுசு கார்கள், 9 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரிடியம் தயாரிக்க 3 பெட்டிகளில் வைத்திருந்த மூலப் பொருட்கள், கெமிக்கல் பாட்டில்கள், நவீன கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் தமிழகத்தில் பல்வேறு நபர்களிடம் இரிடியம் விற்பனை செய்வதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் மேலும் 6 பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.