தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை

 

தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை

சென்னை

பூந்தமல்லி அருகே தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை

சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், ஐஸ்வர்யா கார்டன் ராஜேஸ்வரி தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(40). இவர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் மெஷின்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு கடைக்குச்சென்ற அவர், இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்துள்ளார்.

தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை

அப்போது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அத்துடன், போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க கொள்ளையர்கள் வீட்டிற்குள் மிளகாய் பொடியை தூவி சென்றதும் தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.