சென்னை- காவல் நிலைய விசாரணைக்குப்பின் வீடு திரும்பியவர் தற்கொலை -நீதி கேட்டு மக்கள் திரண்டதால் பரபரப்பு

 

சென்னை- காவல் நிலைய விசாரணைக்குப்பின் வீடு திரும்பியவர் தற்கொலை -நீதி கேட்டு மக்கள் திரண்டதால் பரபரப்பு

சென்னை

சென்னை,துரைப்பாக்கம் ,கண்ணகி நகரில் (வீட்டு எண் 11796) வசிப்பவர் ராஜேந்திரன் (வயது 45).
ஒரு வழக்கு தொடர்பாக கண்ணகி நகர் போலீசார் நேற்று காலை இவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணைக்கு பின் மாலை விடுவிக்கப்பட்ட ராஜேந்திரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை- காவல் நிலைய விசாரணைக்குப்பின் வீடு திரும்பியவர் தற்கொலை -நீதி கேட்டு மக்கள் திரண்டதால் பரபரப்பு
கண்ணகி நகர் போலீசார்

போலீஸ் விசாரணையின் போது மன ரீதியாக பாதிக்கப்பட்டு அதன் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டார்.இவர் சாவுக்கு போலீசார் தான் தான் காரணம் என்று குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.நீதிகேட்டு உறவினர்களுடன் பொதுமக்களும் திரண்டதால் காவல் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை- காவல் நிலைய விசாரணைக்குப்பின் வீடு திரும்பியவர் தற்கொலை -நீதி கேட்டு மக்கள் திரண்டதால் பரபரப்பு
தூக்குப்போட்டு தற்கொலை

ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை- காவல் நிலைய விசாரணைக்குப்பின் வீடு திரும்பியவர் தற்கொலை -நீதி கேட்டு மக்கள் திரண்டதால் பரபரப்பு
அரசு ராயப்பேட்டை மருத்துவமனை

இறந்துபோன ராஜேந்திரனுக்கு மனைவி அனிதா( வயது 42) மற்றும்
மூன்று மகள்களும் உள்ளனர்.