செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 228 பேருக்கு கொரோனா உறுதி!

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 228 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 5,849பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 89,561பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பவர்களின் குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து வருகிறது. அதே போல சென்னையில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 228 பேருக்கு கொரோனா உறுதி!

இதனிடையே சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக கொரோனா உறுதியான விவரங்கள் வெளியாகியுள்ளன. அம்மாவட்டத்தில் மேலும் 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,723ஆக உயர்துள்ளது.