செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 476 பேருக்கு கொரோனா; திருவள்ளூரிலும் வேகமெடுக்கும் பாதிப்பு!

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 476 பேருக்கு கொரோனா; திருவள்ளூரிலும் வேகமெடுக்கும் பாதிப்பு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 6,986 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 94,695 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய தலைமை செயலாளர், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிர் படுத்துமாறு அறிவுறுத்தினார். அதன் படி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 476 பேருக்கு கொரோனா; திருவள்ளூரிலும் வேகமெடுக்கும் பாதிப்பு!

இந்த நிலையில் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 476 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 12,742 ஆக அதிகரித்துள்ளது. அம்மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 8,898 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 3,141 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 483 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 12,389 ஆக அதிகரித்துள்ளது.