செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று : திருவாரூர், குமரி மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை உயர்வு!

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று : திருவாரூர், குமரி மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,150 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று : திருவாரூர், குமரி மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை உயர்வு!

நேற்று மட்டும் 60 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 17 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 68,254 ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று : திருவாரூர், குமரி மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை உயர்வு!

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 6,824ஆக அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் மேலும் 77 பேருக்கு கொரோனா உறுதியானதில் மொத்த பாதிப்பு 637 ஆக உயர்ந்துள்ளது. திருவாரூரை பொறுத்தவரையில் 2 மாத குழந்தை , காவலர் உள்பட மேலும் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 570 ஆக அதிகரித்துள்ளது.