கொரோனாவில் இருந்து மீண்டார் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி!

 

கொரோனாவில் இருந்து மீண்டார் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடும் பாதிப்பை ஏற்படுத்தியிது. தற்போது பாதிப்பு குறைவாக இருப்பதாக அரசு தெரிவித்து வந்தாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலைமை நீதிபதி ஏ.பி சாஹிக்கும் கொரோனா உறுதியானது.

கொரோனாவில் இருந்து மீண்டார் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி!

கொரோனா அறிகுறி இருந்ததால் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.