திருச்சி-கரூர் சாலையில் கனரக வாகன போக்குவரத்தில் மாற்றம் – மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு அறிவிப்பு

 

திருச்சி-கரூர் சாலையில் கனரக வாகன போக்குவரத்தில் மாற்றம் – மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு அறிவிப்பு

திருச்சி : 02.09.20

திருச்சி மாவட்டம், ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2019-2020-இன் கீழ், நாகப்பட்டினம்-கூடலூர்-மைசூர் சாலைகளை கி.மீ 142/2 153/0 (SHU153) இருவழித் தடத்திலிருந்து மூன்று வழித்தடமாக மேம்படுத்தும் பொருட்டு, அச்சாலைகள் அகலப்படுத்துதல், தடுப்புச்சுவர், பாதுகாப்புச் சுவர், வடிகால் அமைத்தல் போன்ற பணிகள் (திருச்சி குடமுருட்டி பாலம் முதல்

திருச்சி-கரூர் சாலையில் கனரக வாகன போக்குவரத்தில் மாற்றம் – மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு அறிவிப்பு
சாலைகள் அகலப்படுத்துதல்

ஜீயபுரம் வரை) நடைபெறுகின்றன. தற்போதைய சூழலில், திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் செல்கின்ற கனரக சரக்கு வாகனங்களினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மேற்படி சாலை மேம்பாட்டு பணிகளில் இடையூறு நேரிடுகிறது. மேற்படி பணிகள் தங்கு தடையின்றி நடைபெறவும், போக்குவரத்து நெரிசலை குறைத்திடவும் சிறப்பு சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

திருச்சி-கரூர் சாலையில் கனரக வாகன போக்குவரத்தில் மாற்றம் – மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு அறிவிப்பு
சாலைகள் அகலப்படுத்துதல்


அதனடிப்படையில், கரூரிலிருந்து திருச்சிராப்பள்ளி நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும் முசிறி வழியாக நம்பர் 1 டோல்கேட் வரப்பெற வேண்டும். திருச்சிராப்பள்ளியிலிருந்து கரூர் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கமான சாலை மார்க்கத்திலேயே (ஜீயபுரம் வழியாக) செல்ல வேண்டும். இந்நடைமுறை 04-09-2020 தேதி முதல் அமலுக்கு வரப்பெறுகிறது.
மேற்கண்டவாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.