தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் – வானிலை மையம்

 

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் – வானிலை மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் – வானிலை மையம்

டெல்டா மாவட்டங்கள் உட்பட சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வங்கக் கடல் பகுதிகளுக்கு 2 நாட்களுக்கும், அரபிக் கடல் பகுதிகளுக்கு 4 நாட்களுக்கும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.