சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது – நீதிபதிகள்

 

சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது – நீதிபதிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அதில் இன்று நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்.

சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது – நீதிபதிகள்

அதன் படி இன்று இந்த விவகாரம் தொடர்பான விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், மருத்துவமனை டீன் தாக்கல் செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின் படி அவர்கள் இருவரின் உடலில் அதிக அளவு காயம் இருப்பதால் சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு முகாந்திரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காவலர்கள் கொடுத்த அறிக்கைக்கும் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு மாறுபாடுகள் அதிகமாக இருப்பதால் இனிமேல் ஒரு நொடி கூட இனிமேல் வீணாகக் கூடாது என்றும் நெல்லை சரக டிஐஜி வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.