தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு அவ்வப்போது மழை பெய்வது நிம்மதியை அளிக்கிறது. இருப்பினும் மழையால் கொரோனா பரவி விடுமோ என்ற அச்சமும் பரவலாக இருக்கிறது. நேற்று 10 கோவை, நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் பேரில் நேற்று பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.