அடுத்த ஒரு மணி நேரத்தில்… 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

அடுத்த ஒரு மணி நேரத்தில்… 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, சேலம், திருச்சி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஒரு மணி நேரத்தில்… 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு, வரும் 26ம் தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,சேலம் மாவட்டங்களிலும் 27 மற்றும் 28ம் தேதிகளில் நீலகிரி, கோவை ,தேனி ,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.